என்ன பண்ணி வைச்சுருக்கீங்க..?: மணிரத்னத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

மணிரத்னம்
இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘
பொன்னியின் செல்வன்
‘ படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது.

விக்ரம்,
ஜெயம் ரவி
,
கார்த்தி
, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார்,
விக்ரம்
பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் கோட்டையில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து அண்மையில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்தனர்.

சுந்தர் சியை டிஸ்டர்ப் பண்ணாதீங்க: குஷ்புவை கண்டித்த டிடி..!

இந்நிலையில் நேற்றைய தினம் ‘பொன்னியன் செல்வன்’ படத்தின் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்த போஸ்டர்கள் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விக்ரம் இடம்பெற்றுள்ள போஸ்டரில் அவரது தலையை தனியாக ஒட்டி வைத்தது போலிருப்பதாகவும், அதிலும் அந்த தலை உடலுடன் சரியாக ஒட்டவில்லை என்றும் படக்குழுவை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கார்த்தியின் வந்தியத்தேவன் தோற்றம் அவர் நடித்த காஷ்மோரா படத்தை நினைவுப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போஸ்டரே அவசரகதில பண்ணி வைச்சு இருக்கீங்க. படத்துல என்னென்ன பண்ணி வைச்சு இருக்கீங்களோ என கமெண்ட் அடித்து வருகின்றனர். ‘பொன்னியன் செல்வன்’ படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.