தனுஷ் கண்டுக்கவே மாற்றாரே..வருத்தத்தில் அவர்கள்..!

நடிகர்
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று சென்றுகொண்டிருந்த தனுஷ் சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கிவருகின்றார். எப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்தார்களோ அதிலிருந்து அவரை சுற்றி பல சர்ச்சைகள் சுற்றிவருகின்றன.

விவாகரத்திற்கு காரணமாக பல விஷயங்கள் கூறப்பட்டாலும் தனுஷ் அதையெல்லாம் கண்டுகொள்ளாது தன் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்திவருகின்றார். தற்போது
வாத்தி
,
திருச்சிற்றம்பலம்
ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார் தனுஷ்.

தனுஷிற்கு பிரச்சனை கொடுக்கும் அந்த நபர்.. சிக்கலில் சிக்கிக்கொண்ட தனுஷ் ?

அதுமட்டுமில்லாமல் இரண்டு பாலிவுட் படங்களிலும் கமிட்டாக உள்ளார். இந்நிலையில் அவரது படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாவதால் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் இருக்கின்றனர். ஜகமே தந்திரம்,
அத்ராங்கி ரே
ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது
மாறன்
படமும் OTT வெளியாகவுள்ளது.

தனுஷ்

ஆனால் மாறன் படத்தை OTT யில் வெளியிட தனுஷ் தான் சிபாரிசு செய்தார் என்ற தகவல் வந்துள்ளது. அதற்கு காரணம் மாறன் படப்பிடிப்பின் போதே இயக்குனர் கார்த்திக் நரேனுக்கும். தனுஷிற்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் ,மேலும் படத்தை பார்த்த தனுஷிற்கு படத்தின் மேல் நம்பிக்கை இல்லாததாகவும் பல தகவல்கள் வந்துள்ளன.

தனுஷ்

எனவே இப்படம் திரையில் வெளியானால் வெற்றிபெறுமா என்ற சந்தேகம் தனுஷிற்கு எழுந்ததன் காரணமாகத்தான் இப்படத்தை OTT யில் வெளியிட முடிவெடுத்தாராம். மேலும் சமீபத்தில் இப்படத்தை பற்றிய அறிவிப்பு வாராவாரம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் தனுஷ் இப்படத்தைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடாமல் இருக்கின்றார்.

மேலும் மாறன் படத்தை தனுஷ் கண்டுகொள்ளவில்லை என இப்படக்குழுவினர் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர். இருப்பினும் சில மாதங்களுக்கு முன்பு வெளியான அத்ராங்கி ரே படத்திற்கு தனுஷ் ஓடிஓடி ப்ரோமோஷன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானாவை அதிர வைத்த தல அஜித்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.