திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை வென்ற கணவன், மனைவி.! <!– திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை வ… –>

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில், நகர்மன்றத் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு கணவன், மனைவி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கவிதா பாண்டியனை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நகராட்சியின் துணைத் தலைவர் இடம் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அக்கட்சியின் சார்பில் யாரும் போட்டியிட முன்வராததால் கவிதா பாண்டியனின் கணவர், ஆர்.எஸ்.பாண்டியன் திமுக சார்பில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட மனு அளித்த அதிமுக, சுயேட்சை வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டதால் ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதே போன்று தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பேரூராட்சியிலும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு கணவன், மனைவு தேர்வாகியுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.