‘ஒன்-வே ஒன்லி’ – மார்ச் 8 முதல் சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்த ரஷ்ய விமான நிறுவனங்கள் முடிவு

மார்ச் 8 முதல் சர்வதேச விமான போக்குவரத்தை ரஷ்ய விமான நிறுவனங்கள் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளதை அடுத்து நாளை முதல் ரிட்டர்ன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரஷ்ய விமானத்தில் பயணம் செய்ய முடியாது.

ரஷ்ய விமான நிறுவனமாக ஏரோபிளோட் விமானத்தில் ரிட்டர்ன் டிக்கெட் வைத்துள்ள சர்வதேச பயணிகள் மார்ச் 6 ல் இருந்து அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளது.

மார்ச் 8 முதல் அனைத்து சர்வதேச விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

உள்நாட்டு போக்குவரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஏரோபிளோட் தவிர ரோஸ்சியா மற்றும் அரோரா விமான நிறுவனங்களின் விமானங்களும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நாளை முதல் விமான சேவை நிறுத்தப்படும் வரை ஒன்-வே எனும் ஒருவழி பயண டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.