தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் ரூ.564 கோடி மோசடி: கோஸ்டல் எனர்ஜி நிறுவன நிர்வாகி கைது…

சென்னை: தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் ரூ.564 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதால், பிரபல நிலக்கரி இறக்குமதி நிறுவனமான  கோஸ்டல் எனர்ஜி நிறுவன நிர்வாகியை அமலாக்கத் துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனங்களில் கோல்டன் குரூப்பும் ஒன்று. இந்த நிறுவனம், கோஸ்டல் எனர்ஜன், கோஸ்டல் எனர்ஜி அன்டு ரிசோர்சஸ் என பல பெயர்களில்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகியாக அகமது ஏ.ஆர் புகாரி என்பவர் இருந்து வருகிறார். அகமது புகாரி சொந்தமாக தூத்துக்குடியில் மின் நிலையம் ஒன்றை உருவாக்கி மின் உற்பத்திசெய்து வருவதாகவும், தமிழகத்துக்கு தேவைப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தில் குறிப்பிட்ட சத விகிதம் இவரது நிறுவனம் விநியோகம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தின்மீது தரமற்ற  நிலக்கரி இறக்குமதி செய்து ரூ.564 கோடி  பண மோசடி செய்ததாக கடந்த 2018-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. அவரது நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், அவர் சட்ட விரோதமாக மோசடி செய்தகோடிக்கணக்கான பணத்தை அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களில் பரிமாற்றம் செய்து. அதை மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு, சட்ட விரோதமாக பணம்பரிமாற்றம் செய்ததையும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பண பரிமாற்றசட்டத்தின் கீழ் அகமது புகாரியின் நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர்மீது அமலாக்கத்துறையும் வழக்க பதிவு செய்து விசாரண நடத்தி வந்தது.

அதன்படி, கடந்த  2011-12 மற்றும் 2014-15-ம் ஆண்டுகளில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியை உயர்தர நிலக்கரி என ஏமாற்றி மோசடியாக அரசுக்கு விற்பனை செய்து குற்ற சதியில் ஈடுபட்டதாக வருவாய் புலனாய்வு இயக்ககம் மேற்கொண்ட விசார ணையில் தெரியவந்தது.  இது தொடர்பான அமலாக்கத் துறை நடத்தியவிசாரணையில் தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில், போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து சுமார் ரூ.564 கோடிசம்பாதித்தது தெரியவந்தது.

இதையடுத்து அதன் நிர்வாகி அகமது புகாரியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

அகமது புகாரி சொந்தமாக தூத்துக்குடியில் மின் நிலையம் ஒன்றை உருவாக்கி மின் உற்பத்திசெய்து வருவதாகவும், தமிழகத்துக்கு தேவைப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தில் குறிப்பிட்ட சத விகிதம் இவரது நிறுவனம் விநியோகம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.