தீ விபத்தில் இருந்து ரயிலை காப்பாற்ற ரயில் பெட்டிகளை தள்ளிச்சென்ற பயணிகள் <!– தீ விபத்தில் இருந்து ரயிலை காப்பாற்ற ரயில் பெட்டிகளை தள்ள… –>

உத்தரப் பிரதேசம் மீரட் அருகே சகாரண்பூர் – டெல்லி ரயில் எஞ்சினிலும் 2 பெட்டிகளிலும் தீப்பிடித்த நிலையில், மற்ற பெட்டிகளுக்குத் தீ பரவாமல் தடுக்க அதைக் கழற்றிவிட்டுப் பயணிகள் தள்ளிச் சென்றனர்.

மீரட் அருகே தவுராலா ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சினிலும் அதையொட்டிய 2 பெட்டிகளிலும் தீப்பிடித்தது. உடனடியாகப் பயணியர் அனைவரும் கீழிறக்கப்பட்டனர். இதையடுத்து மற்ற பெட்டிகளுக்குத் தீப் பரவாமல் தடுக்க அதை ரயில்வே ஊழியர்கள் தனியே கழற்றிவிட்டனர்.

மற்றொரு எஞ்சினை இணைக்கும் வரை காத்திருக்காமல் அந்தப் பெட்டிகளை நடைமேடையில் நின்ற பயணிகளே சற்றுத் தொலைவுக்குத் தள்ளிக் கொண்டுசென்றனர்.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.