ஹிஜாப் விவகாரத்தில் கைதான பாஜ பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன்

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் கடந்த 19ம் தேதி நடந்த உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது, 8வது வார்டு வாக்குச்சாவடியில், முஸ்லிம் பெண்களிடம் ஹிஜாப்பை அகற்றக்கோரிய பாஜ வாக்குச்சாவடி முகவர் கிரிநந்தன் கைது செய்யப்பட்டார். நேற்றுடன் அவரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், மேலூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெயந்தி அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கிரிநந்தன் கொட்டாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் நேரில் ஆஜராகி ஒரு மாதத்திற்கு கையொப்பமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.