” இந்தியா நினைத்தால் போரை நிறுத்த முடியும் ” – உக்ரைன் நம்பிக்கை

கியூ: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும் என உக்ரைன் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் டிமித்ரோ குலேபா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ” உக்ரைன் நாட்டில் ஆசியா , ஆப்ரிக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வர பெரும் உதவியாக இருந்துள்ளோம். வெளி நாட்டு மாணவர்களை நாங்கள் பத்திரமாக வெளியேற்ற சிறப்பான முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இன்னும் பத்திரமாக மீட்க ரஷ்யா தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.

latest tamil news

தற்போது போரில் வெற்றி பெற்றதாக காட்டி கொள்ள ரஷ்யா முயற்சிக்கிறது. நாங்கள் எங்கள் மண்ணை காப்பாற்ற போராடுகிறோம். இந்தியா, சீனா , நைஜீரியா நாடுகள் ரஷ்யாவிடம் தாக்குதலை நிறுத்த கேட்க வேண்டும். தற்போதைய போரை யாரும் விரும்பவில்லை என ரஷ்ய அதிபர் புடினிடம் பேச வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.