சென்னை: உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்தின் நிதியை பயன்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 35 மாணவர்களை போர் பகுதியில் இருந்து அண்டை நாட்டிற்கு அழைத்துவர பேருந்து கட்டணமாக சுமார் ரூ.14 லட்சத்தை (17,500 டாலர்) மாநில அரசு செலுத்தியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/1646533181_Tamil_News_3_6_2022_76913089.jpg)