செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி.. ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுவன் கைது <!– செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு… –>

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி, அவரது நண்பர்களிடம் பணம் பறிக்க முயன்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கடந்த மாதம் சைபர் கிரைம் போலீஸில் புகார் ஒன்றை அளித்திருந்தார். பேஸ்புக்கில் உள்ள தனது புகைப்படத்தை எடுத்து, அதே பெயரில் போலியாக மற்றொரு கணக்கு தொடங்கி, தனது நட்பு வட்டத்தில் இருப்பவர்களிடம் மர்ம நபர் பணம் கேட்பதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர் ராஜஸ்தானைச் சேர்ந்தவன் என்பதையும் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதையும் கண்டுபிடித்தனர்.

உடனடியாக ராஜஸ்தான் விரைந்த தனிப்படை போலீசார், சிறுவனை கைது செய்து செங்கல்பட்டு அழைத்து வந்து மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.