மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது தமிழக அரசு – வெளியான அதிர்ச்சி செய்தி.!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தமாட்டோம்” என்று கூறி வந்த தி.மு.க. அரசு, தற்போது அந்த கல்விக் கொள்கைப்படி 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் செய்திருப்பது ஏன்? 

எல்லாவற்றையும் போல இதிலும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறதா? 

மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய இப்பிரச்னையில், நீட் தேர்வு விவகாரத்தைப் போல தி.மு.க. அரசு நாடகமாடக் கூடாது. 

புதிய கல்விக் கொள்கை குறித்த தி.மு.க. அரசின் நிலைபாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.