எங்கள் மண்ணில் அட்டூழியங்கள் நிகழ்த்தியவர்களை தண்டிப்போம் : 'மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம்' – உக்ரைன் அதிபர் காட்டம் <!– எங்கள் மண்ணில் அட்டூழியங்கள் நிகழ்த்தியவர்களை தண்டிப்போம்… –>

போரின் போது தங்கள் மண்ணில் அட்டூழியங்கள் நிகழ்த்தியவர்களை தண்டிப்போம் என்றும் அவர்களை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம் என்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி திட்டமிட்டு படுகொலைகளை நிகழ்த்தி வருவதால், குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் மக்களை தாக்கியவர்களையும், குண்டு வீசியர்களையும் அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தவர்களையும் கண்டறிவோம் என்றும் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

மேலும், மேற்கத்திய நாடுகள் மேலும் உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்ட அவர், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் போதாது என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.