தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்தில் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழகத்தில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் மற்றும் தியாகிகளின் நினைவு தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் இன்று  தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு  இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் விடுமுறை அளிக்கப்பட்ட தினத்திற்கு பதிலாக 19.03.2022 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.