“ரஷ்ய ராணுவ ஜெனரல் மேஜர் கொல்லப்பட்டார்!” – உக்ரைன் ராணுவ புலனாய்வு அமைப்பு

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போர் 13-வது நாளாக இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலிருந்தும் பல்வேறு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பல லட்சம் உக்ரேனியர்கள் சொந்த நாட்டிலிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாகப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைக்கும், உக்ரைன் படைக்கும் நடைபெற்ற தாக்குதல்களில் ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என உக்ரைன் ராணுவ புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டதாக கூறப்படும் ரஷ்ய ராணுவ ஜெனரல் மேஜர் விட்டலி ஜெராசிமோவ்

இந்த தகவலில், கார்கிவ் நகரில் நேற்று நடைபெற்ற போரின்போது உக்ரைன் படையினரால், பல ரஷ்ய வீரர்களுடன் ரஷ்ய ராணுவ ஜெனரல் மேஜர் விட்டலி ஜெராசிமோவ் கொல்லப்பட்டார். இவர் முன்னதாக இவர் செச்சினியா மற்றும் கிரிமியாவில் ஆகிய போர்களில் ஈடுபட்டிருந்திருக்கிறார் எனவும் உக்ரைன் ராணுவ புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.

முன்னதாக கடந்த வாரத்தில், ரஷ்யாவின் 41-வது இராணுவத்தின் மற்றொரு உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி சுகோவெட்ஸ்கி போரில் கொல்லப்பட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.