குடும்பப் பிரச்சனையில் தந்தையின் கடைக்குத் தீ வைத்த மகன் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குடும்பப் பிரச்சனையில் தந்தையின் கடைக்குத் தீ வைத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தாமரைப்புலம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு இரண்டு மனைவிகள். மாரியப்பன் அதே பகுதியில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

மாரியப்பனின் முதல் தாரத்து மகன் லட்சுமணனுக்கும் மாரியப்பனுக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை எழும் என்று கூறப்படுகிறது.

நேற்று இரவு தந்தையிடம் லட்சுமணன் பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அவர் பணம் கொடுக்காததால், ஆத்திரத்தில் தந்தையின் இருசக்கர வாகன உதிரிபாக விற்பனை கடைக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கொழுந்துவிட்டு எரிந்த தீ பக்கத்தில் இருந்த இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையிலும் பரவி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் எரிந்து கருகி நாசமாகின.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.