ரஷ்யாவுடன் சமரசத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்த உக்ரைன் அதிபர் வோல்டிமிர் ஜெலன்ஸ்கி, நேட்டோவில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு இனி வலியுறுத்தப் போவதில்லை என்றார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, தன்னாட்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட டோனஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகள் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் சமரசத்தில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்தார். நேட்டோ படைகள் உக்ரைனை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்றும், அவர்களிடம் தானம் பெறும் நாட்டின் தலைவராக தான் இருக்க விரும்பவில்லை என்றார்.
அதிபர் புதினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார். ரஷ்யாவை தவிர வேறெந்த நாடும் டோனஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளை தன்னாட்சி பெற்றதாக அறிவிக்கவில்லை என்றும், உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கம் மக்கள் தனி நாடாக எப்படி வாழ முடியும் என்று தெரிவித்தார்.