பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த வழக்கிலிருந்து  தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த போது, பேரறிவாளன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், கடந்த 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார், இதுவரை மூன்று முறை பரோலில் வெளிவந்தபோதும் சிறை நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடித்தார்.

மேலும் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாததால், ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது மத்திய அரசு தரப்பில், ஏற்கெனவே அரசுத் தரப்பில் பேரறிவாளனுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு ஜாமீன் வழங்க கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.    

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.