இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி.. அரசு பேருந்து ஓட்டுநர் இருவர் பலி..!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜோதி பிரகாஷ். சென்னை மத்திய மாநகர பேருந்து பணிமனையில் நேராக இருக்கும் இவருடன் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த நந்தகோபன் என்பவரும் வேலை செய்து வந்துள்ளார்.

இருசக்கர வாகனத்தை பணிமனையில் விட சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது இந்த விபத்தில் ஜோதி பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

படுகாயமடைந்த நந்தகோபாலன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.