கள்ளக்குறிச்சியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கைது.!

கள்ளக்குறிச்சி அருகே, சாலையில் போவோர், வருவோரை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

காரனூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே, இளைஞர் ஒருவர் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவரை சுற்றிவளைத்து பிடித்து சரமாரியாகத் தாக்கி மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் பிடிக்க முற்பட்டபோது அந்த இளைஞர் கத்தியுடன் கீழே விழுந்ததில் கைவிரல் ஒன்று துண்டானது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.