சக எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் மரணமடைந்த வீரர்.. அவரது உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்.!

மேற்குவங்கத்தில் சக எல்லை பாதுகாப்பு படை வீரரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நாகையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல், அவரது சொந்த ஊரான கீழையூரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேற்குவங்க எல்லையில் ஞானசேகரனுக்கும் அவருடன் பணியாற்றி வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சக வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடந்த 7-ம் தேதியன்று இருவரும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு உயிரிழந்தனர்.

இந்நிலையில் அங்கிருந்து சொந்த ஊருக்கு  கொண்டுவரப்பட்ட ஞானசேகரனின் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஈசனூர் பகுதியிலுள்ள கல்லறை தோட்டத்தில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.