விவசாயிகள் போராட்டம் நடந்த லக்கிம்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க. வெற்றி.!

விவசாயிகளின் போராட்டம் நடைபெற்ற உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்கீம்பூர் கேரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், காரை விட்டு மோதிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் சில பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அந்த மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

கடந்த 2017 சட்டமன்ற தேர்தலின் போதும், லக்கீம்பூர் கேரியிலுள்ள எட்டு தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.