புதுச்சேரியில் ஷோரூம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தனது சொந்த வாகனம் போல் ஓட்டிச்சென்ற திருடன்.!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் யமஹா மோட்டார் ஷோரூம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர் ஒருவர் தனது சொந்த வாகனம் போல் ஓட்டிச் சென்று திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

வாடிக்கையாளர் ஒருவர் தனது வாகனத்தை பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்து விட்டுச்சென்ற நிலையில் அதனை பழுதுபார்த்து, சாவியுடன் ஊழியர்கள் ஷோரூமிற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனை நோட்டமிட்ட கொள்ளையன் ஒருவன் வாடிக்கையாளர் போல் ஷோரூமிற்குள் சென்றுவிட்டு வெளியே வந்து வாகனத்தை தனது சொந்த வாகனம் போல் எடுத்து ஓட்டிச் சென்றுள்ளான்.

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தன. இதையடுத்து ஷோரூம் மேலாளர் அளித்த புகாரின் பேரில், பைக்குடன் தப்பிச்சென்ற திருடனை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.