இந்திய வம்சாவளி பெண் நெதர்லாந்து துாதராக நியமனம்| Dinamalar

வாஷிங்டன்:நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க அதிபரின் துாதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துகால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசின் முக்கிய பதவிகள் மற்றும் வெளிநாட்டு துாதரக நியமனங்கள் குறித்த அறிவிப்பை, அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார்.அவற்றில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்திற்கான தன் துாதராக, ஷெபாலி ரஸ்தான் துகால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

காஷ்மீரில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய ஷெபாலி ரஸ்தான் துகால், நியூயார்க் பல்கலையில் எம்.ஏ., அரசியல் படித்தவர். சான் பிரான்சிஸ்கோவின் பெண்கள் உரிமை கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக இருக்கிறார். ஜனநாயக கட்சி தேசிய குழுவின் நிதிப் பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்தவர்.

இரு குழந்தைகளுக்கு தாயான ஷெபாலி பல்வேறு அமைப்புகளின் விருதுகளை பெற்றவர். இவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் அதிபர் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினராக இருந்தவர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.