உ.பி தேர்தலில் பா.ஜ.க வெற்றியால் தற்கொலை செய்துகொண்ட 3 சகோதரர்கள்?

உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை வெற்றி பெற்றது. பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட்ட அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
இந்நிலையில் பா.ஜ.கவின் வெற்றியால் மனமுடைந்த மூன்று சகோதரர்கள்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்துகொண்டதாக பரவும் புகைப்படம்
அறையில் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான புகைப்படங்கள் 2020-ம் ஆண்டு எடுக்கப்பட்டது எனவும், இறந்தவர்களுக்கும் உத்தரப்பிரதேச அரசியல் கட்சிகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற பொய் செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.