ஷோரூமுக்கு எடுத்துச் செல்லப்பட்ட புத்தம்புது சரக்கு வாகனம்.. லாரி மோதி தீப்பிடித்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே டெலிவரிக்காக எடுத்துச்செல்லப்பட்ட பதிவு செய்யப்படாத புத்தம் புது சரக்கு வாகனம் ஒன்று வழியில் லாரி மீது மோதி, தீப்பிடித்ததில் அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

திருப்பத்தூரை சேர்ந்த ஃபாசில் என்பவர் ஓசூரில் உள்ள அசோக் லைலேண்ட் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். நேற்று டோஸ்ட் வகை மினி சரக்கு வாகனம் ஒன்றை கடலூரில் உள்ள ஷோரூமுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.

நள்ளிரவு ஒன்றரை மணியளவில் திருவண்ணாமலை அருகே மகனூரபட்டி என்ற இடத்தில் வளைவு ஒன்றில் திரும்பும்போது, எதிரே வந்த லாரி மீது வாகனம் மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் தீப்பற்றி எரிந்த வாகனத்தில் இருந்து ஃபாசிலால் வெளியே வரமுடியாத நிலையில், வாகனத்தோடு எரிந்து கருகி உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் போலீசில் சரணடைந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் சென்று ஃபாசிலின் உடலை மீட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.