3ம் ஆண்டு திருமண நாள்; ஜாலியாக போட்டில் சுற்றி திரிந்த ஆர்யா- சாயிஷா!

கஜினிகாந்த் படத்தில் நடித்து வந்தபோது காதல் வயப்பட்ட ஆர்யாவும், சாயிஷாவும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் அரியானா என்ற மகள் பிறந்தாள். இந்நிலையில் நேற்று ஆர்யா- சாயிஷா தம்பதியினர் தங்களது மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்து உள்ளார்கள். அதோடு போட்டில் அவர்கள் ஜாலியாக சுற்றித் திரிந்தனர். அது குறித்த புகைப்படங்களை சாயிஷா வெளியிட்டுள்ளார். அதோடு ஆர்யாவுக்கு தனது திருமண நாள் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார்.

அதில், நான் உங்களை என்றென்றும் நேசிக்கிறேன், மதிக்கிறேன். என்னுடையவராக இருப்பதற்கு நன்றி. உலகத்தில் சிறந்த கணவர் மற்றும் அப்பா! காலத்தால் அழியாத நம்முடைய காதல் வாழ்க என்று அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதேபோன்று ஆர்யாவும் தனது மனைவிக்கு ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். என் வாழ்க்கையில் சிறந்த துணைவி சாயிஷா. என்னை அதிகம் காதலிக்கும் சாயிஷா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.