காதல் திருமணம் செய்தவரை சமாதானத்துக்கு அழைத்து கொலை| Dinamalar

கலபுரகி : காதல் திருமணம் செய்தவரை சமாதானத்துக்கு அழைத்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கலபுரகியில் நடந்தது.கலபுரகியை சேர்ந்தவர் சுஷ்மிதா, 23. இவர் கல்லுாரியில் படிக்கும்போது டேசி என்பவரிடம் டியூஷனுக்கு சென்றார்.

அப்போது அவரது தம்பி பிரீதமுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த காதலுக்கு சுஷ்மிதா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் பீதருக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். பின் பெங்களூரில் தனி வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் முகமது என்பவர் இருவருக்கும் போன் செய்து, கலபுரகிக்கு வா; சமாதானம் பேசி கொள்ளலாம் என கூறி அழைத்தார்.

ஒரு வாரத்துக்கு முன் இருவரும் கலபுரகி சென்றனர். நேற்று முன்தினம் முகமது வீட்டுக்கு சென்று விட்டுபிரிதம் திரும்பி கொண்டிருந்தார்.அப்போது வழி மறித்த சுஷ்மிதா உறவினர்கள், அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.