கொலையான ஹிந்து தொண்டர்கள்| Dinamalar

ஷிவமொகா : கொலை செய்யப்பட்ட ஹிந்து தொண்டர்களின் குடும்பத்துக்கு பெஜாவர் மடாதிபதி ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தார்.ஷிவமொகாவின் சீகேஹட்டியை சேர்ந்தவர் ஹர்ஷா, 25. பஜ்ரங்தள் தொண்டரான இவர் கடந்த மாதம் 20ல் படுகொலை செய்யப்பட்டார்.

இவரது வீட்டுக்கு உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் நேற்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.மடத்தின் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.இதையடுத்து, 10 ஆண்டுக்கு முன் கொலை செய்யப்பட்ட பஜ்ரங்தள் தொண்டர் விஸ்வநாத் வீட்டுக்கு சென்று அவரது தாய்க்கு ஆறுதல் கூறினார். ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.