சீனாவில் மீண்டும் 'கொரோனா' அதிகரிப்பு

சீனாவில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு பல்வேறு மாகாணங்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தது.

இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளுர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, சீன நகரங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,15,466 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆகும்.

இதனால் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.