ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த துணை ராணுவ வீரர் முக்தார் அகமது மருத்துவமனை கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.
விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த அவர் பலியானது அவருடைய ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 3 நாட்களில் தீவிரவாதிகள் நடத்திய 4வது தாக்குதல் இதுவாகும். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் செல்லாதவாறு அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் இரண்டு கிராம நிர்வாகிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ஸ்ரீநகர் சந்தையில் குண்டு வீசிய தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்து 38 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த ஒருவாரத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது.