நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் அமர்வு நாளை தொடக்கம்.!

நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, ஜனவரி இறுதியில் தொடங்கி பிப்ரவரி முதல் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, நாளை துவங்கி, ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கிறது.

இரண்டாவது அமர்வில், இரு அவைகளும் மொத்தம் 19 நாட்கள் கூட உள்ளன. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, இரு சபைகளும் வழக்கம் போல் காலை 11 மணிக்கு துவங்கும். மாநிலங்களவை ஒரு மணி நேரம், கூடுதலாக மாலை 6 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.