கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொது பட்டமளிப்பு விழாவின் 2 ஆம் நாள் நிகழ்வு நேற்றைய தினம் (13) நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் கூடத்தில் நேற்றைய (14) தினம்  காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மூன்று அமர்வுகளாக இடம்பெற்றன.


கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்  அவர்களது ஒருங்கிணைப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின்  வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றின் பட்டமளிப்பின் போது இம்முறையே ஒரேதடவையில் அதிகளவிலான (1958) உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரி மாணவர்களுக்கும், பட்டப்பின் தகைமை பெறுபவர்களுக்கும், கௌரவப் பட்டம் பெறுபவர்களும் தமக்கான பட்டத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இம்முறை பட்டமளிப்பு விழாவில் வணிக நிர்வாகத்தில் முதுமாணி ( MBA ), முதுகலைமாணி ( MA ), முதுகல்விமாணி ( MEd ), அபிவிருத்திப் பொருளியலில் முதுமாணி ( MDE ) ஆகிய 133 பட்டப்பின் தகமைகளுக்கான பட்டங்களும், 2 கௌரவப் பட்டங்களும் முதலாம் நாள் முதலாவது அமர்வில் வழங்கப்பட்ட.
 
ஏனைய இளமாணிப் பட்டங்களுக்காக 2வது அமர்வில் 408 பட்டதாரி மாணவர்களும், 3வது அமர்வில் 340 பட்டதாரி மாணவர்களும் பட்டம் பெற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.