மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூட்டில் 2 கவுன்சிலர்கள் உயிரிழப்பு.!

மேற்கு வங்கம் புருலியாவில் உள்ள ஜால்டா நகராட்சி வார்டு 2 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தபன் காண்டு அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவர் உயிர்பிரிந்தது.

இதே போல் வடக்கு பர்கானா மாவட்டத்தின் பனிஹாட்டியில் திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் அனுபம் தத்தாவும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.