ரஷ்யப் படைகள் கடத்தி வைத்துள்ள இரு மேயர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

ரஷ்யப் படைகள் கடத்தி வைத்துள்ள மெலிடோபோல் மற்றும் னிபிரோருடேனி நகர மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன் மெலிடோபோல் நகர மேயரை ரஷ்யப் படைகள் கடத்தியதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்த நிலையில் தற்போது ன்பிரோருடேனி நகர மேயரும் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மேயர்கள் கடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக கூறிய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைக்கான தலைவர் ஜோசப் போரல், ஒரு ஜனநாயக நாட்டின் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு ரஷ்யா நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றார்.       

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.