ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

கர்நாடகா: நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய கர்நாடாக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டது. தென்னிந்தியா முழுவது இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தேவதத் காமத், ரவிவர்ம குமார் ஆகியோரும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கியும் வாதிட்டனர். இதையடுத்து உடுப்பி பி.யு. கல்லூரி சார்பில் மூத்தவழக்கறிஞர் எஸ்.எஸ்.நாகனந்த் வாதிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் ஹிஜாப் ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகளுக்கு இடையே வன்முறை தீவிரமடைந்ததால், பாஜக தலைமையிலான கர்நாடக அரசு பள்ளிகளை சில நாட்களுக்கு மூட உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் எந்தவிதமான மத உடைகளையும் அணியாமல் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த நிலையில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) தனது தீர்ப்பை வழங்க இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.