சந்தானத்தின் அடுத்து படத்தை இயக்குவது இவரா ? இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

நடிகர்
சந்தானம்
சின்னத்திரையிலிருந்த்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கின்றார்.
மன்மதன்
படத்தில் சிம்புவினால் அறிமுகமான சந்தானம் அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்தார்.

ஒரு கட்டத்தில் சந்தானம் இல்லாமல் படங்களே வெளியாகாது. அந்த அளவிற்கு பிஸியான காமெடி நடிகரான வலம் வந்தார். மேலும் பல படங்களின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இவரது காமெடி இருந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

வெளியான பீஸ்ட் அறிவிப்பு… குழப்பத்தில் ரசிகர்கள்..!

இந்நிலையில் ஹீரோவிற்கு நண்பராகவே நடிக்கின்றோமே நாமும் ஹீரோவாக நடிக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு வரவே வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்தார். பின்பு இனிமே நடித்தால் ஹீரோதான் என முடிவெடுத்த சந்தானம் இனிமே இப்படித்தான் படத்தின் மூலம் முழுநேர ஹீரோவானார்.

சந்தானம்

அதன் பின் தில்லுக்கு துட்டு, டகால்ட்டி , A1, சக்கைபோடு போடுராஜா, பாரிஸ் ஜெயராஜ்,
சபாபதி
போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து வரும் சந்தானம் அடுத்ததாக
ரத்னா குமார்
இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

சந்தானம்

மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாகவும் செயல்பட்டார். இந்நிலையால் இவர்கள் இணையும் படத்தின் அறிவிப்பு வருகின்ற 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்திற்கு
சந்தோஷ் நாராயணன்
இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானாவை அதிர வைத்த தல அஜித்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.