நேரலை நிகழ்ச்சியில் உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர் கைது| Dinamalar

மாஸ்கோ: நேரலை நிகழ்ச்சியில் உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் சேனல் ஒன் நிறுவன ஊழியர் மரியா ஓசியனிகோவா. இவர் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்தும் போருக்கு எதிரான பதாகை ஒன்றை ஏந்தி வந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதனை அடுத்து இவர் மீது வழக்குப்பதிவு செய்து ரஷ்ய போலீசார் இவரை கைது செய்துள்ளனர். இவரிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

latest tamil news

ரஷ்யப் படைகள் நடத்தும் போருக்கு எதிராக அந்நாட்டு குடிமக்கள் பலர் தலைநகர் மாஸ்கோவில் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். முன்னதாக ரஷ்ய விமானி ஒருவர் ஒலிபெருக்கியில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் குற்றச் செயல் என்று அறிவித்தது ரஷ்ய அரசை அதிருப்தி அடையச் செய்தது. தற்போது செய்தியாளர் மரியாவின் இந்த செயல் விளாடிமிர் புடின் அரசை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.