ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பானின் தலைநகர் டோக்கியோ நகரில் இன்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வட கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட அடுத்தடுத்து இரு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் ரிக்டர் அளவில் 7.1 ஆகவும், பின்னர் மீண்டும் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டங்கள் குலுங்கின.

குடியிருப்பு பகுதி மக்கள் அச்சத்தில் வெளியேறினர். லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.