ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை| Dinamalar

டோக்கியோ:ஜப்பானின் புகுஷிமா கடலுக்கு அடியில், ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவானதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கிழக்காசிய நாடான ஜப்பானின் வடக்கே, புகுஷிமாவில், கடலுக்கு அடியில் 60 கி.மீ., ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில், 7.3 அளவுக்கு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து புகுஷிமா மற்றும் மியாகி பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதே பகுதியில் 11 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தின் போது சுனாமி ஏற்பட்டதில் அணு ஆலை சேதம் உட்பட பயங்கர அழிவுகள் ஏற்பட்டன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.