பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்கும் பகவந்த் மானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை; பஞ்சாபில் மாநிவலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ள பகவந்த்மானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என டிவிட் செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் அமோக வெற்றி பெற்றார்.

இதையடுத்து,  பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் இன்று (மார்ச் 16-ஆம் தேதி) பதவியேற்கிறார்.  பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப் முதலமைச்சராக  பொறுப்பேற்க உள்ள பகவந்த் மானுக்கு தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,   பஞ்சாப் முதல்வராக இன்று பதவியேற்கும் பகவந்த் மானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகியவை இந்திய யூனியனில் மொழிவாரி உரிமைகள் மற்றும் மாநில உரிமைகள் பற்றி குரல் கொடுத்த நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. பஞ்சாபில் புதிய அரசாங்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.’

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.