4வது இன்னிங்சில் அதிக ரன்கள் – 27 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாபர் அசாம்

கராச்சி:
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கராச்சியில் நடந்தது. இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 196 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் நான்காவது இன்னிங்சில்அதிக ரன்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.
ஏற்கனவே, 1995-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன் 185 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.