”ஆன்லைனில் லோன் வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”-கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்

பொதுமக்கள் ஆன்லைனில் கடன் வாங்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அறிவுறுத்தியுள்ளார்.

சைபர் குற்றங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மோசடி குற்றங்களைத் தடுக்க 1930 என்ற கட்டணமில்லா புகார் எண் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

பாதிக்கப்பட்டோர் உடனடியாக புகாரளித்தால் பணத்தை மீட்க முடியும் என்று அவர் தெரிவித்தார். மேலும், கோவை சைபர் காவல் நிலையத்திற்கு வந்த பண மோசடி சம்பந்தமான புகார்களில், கடந்த ஓராண்டில் மட்டும் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் முடக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.