தமிழக கோவில்களில் உருக்க உள்ள தங்கம் 2000 கிலோவை தாண்டும் – அமைச்சர் சேகர் பாபு

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் உருக்குவதற்காக உள்ள நகைகளின் எடை 2ஆயிரம் கிலோவிற்கு அதிகமாக இருக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,
சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

மேலும் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட 753 ஏக்கர் நிலத்தை சேர்த்து தமிழக கோவிலகளுக்கு 4 லட்சம் ஏக்கர் நிலம் சொந்தமாக இருப்பதாக தெரிவித்தார்.

12ஆயிரம் கோவில்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாயை கொண்டு ஒரு கால பூஜை நடத்தப்படுகிறதா என ஆலோசித்ததாகவும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.