மகள் ஐஸ்வர்யாவிற்காக 'இதை' செய்வாரா ரஜினி..?: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

தனுஷை பிரிந்ததை தொடர்ந்து தனது வேளைகளில் படு பிசியாக ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட இவர், மீண்டும் உடல்நலக் குறைவு காரணாமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஐஸ்வர்யாவின் ‘
முசாபிர்
‘ ஆல்பம் பாடல் இரண்டாவது முறையாக திட்டமிட்ட தினத்தில் வெளியிட முடியாமல் போனது.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். அதே போல் தனுஷும் வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட படப்பிடிப்பில் பிசியானார். இதனிடையில் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

தனுஷ் பட நடிகையிடம் போனில் பீல் பண்ணி பேசிய அனிருத்: என்ன சொல்லிருக்காரு பாருங்க..!

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் கடந்த காதலர் தினத்தன்றும், மகளிர் தினத்தன்றும் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்து, ஐஸ்வர்யாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திட்டமிட்ட தினங்களில் வெளியிட முடியாமல் போனது. அதனை தொடர்ந்து டீசர் மட்டும் வெளியானது. திரையுலக பிரபலங்கள் பலரும் ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடல் வெற்றியடைய வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ பாடல் வெளியாக உள்ளது. இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து வெளியிடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். ஆனால்
தனுஷ்
, ஐஸ்வர்யா விவாகரத்து முடிவில் மகள் மீது ரஜினி மிகுந்த கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடலுக்கு ரஜினி தரப்பில் இருந்து சப்போர்ட் கிடைப்பது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.

உ பி யில் இருக்கும் வெறித்தனமான ரஜினி ரசிகர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.