மேயரை மீட்க 9 ரஷ்ய வீரர்களை விடுவித்த உக்ரைன்!| Dinamalar

கீவ்: மெலிடோபோல் மேயரை மீட்பதற்காக, தனது பிடியில் இருந்த 9 ரஷ்ய வீரர்களை உக்ரைன் அரசு விடுதலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து 22வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா வீரர்கள், உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயர் இவான் பெடரோவை கடந்த வெள்ளிக்கிழமை கடத்தி சென்றனர். தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அவரை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்தது. ஆனால், எப்படி அவர் விடுவிக்கப்பட்டார் என்ற தகவல் ஏதும் தரப்படவில்லை.

இந்நிலையில், மேயரை மீட்பதற்காக, தங்களது பிடியில் இருந்த 9 ரஷ்ய ராணுவ வீரர்களை, உக்ரைன் விடுதலை செய்ததாகவும், அவர்கள் அனைவரும் 2002 முதல் 2003ம் ஆண்டிற்குள் பிறந்தவர்கள் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.