வேலூரில் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியைகளை பிரிய மணமில்லாமல் கட்டியணைத்து கதறி அழுத பள்ளி மாணவிகளின் வீடியோ காட்சிகள்.1

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில், பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியைகளை பிரிய மணமில்லாத பள்ளி மாணவிகள், ஆசிரியைகளை கட்டியணைத்து கதறி அழுத வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கே.வி. குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வந்த கார்த்திகேயன், புனிதா, ஜெயந்தி, தனலட்சுமி உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து நேற்று ஆசிரியைகள் பள்ளியில் இருந்து புறப்பட்ட போது அவர்களை சூழ்ந்துக் கொண்ட மாணவிகள், ஆசிரியைகளை கட்டியணைத்துக் கொண்டு அவர்களை செல்ல விடாமல் தடுத்து கதறி அழுதனர்.

மாணவிகளின் பாசத்தை கண்டு கண்கலங்கிய ஆசிரியைகள், மாணவிகளை சமாதானப்படுத்தி நன்றாக படிக்க வேண்டுமென அறிவுறுத்திவிட்டு பள்ளியில் இருந்து விடைபெற்றுக் கொண்டனர்.

 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.