கடந்த 10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2,200 கோடி சேமிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை:
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்படும்போது, பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நாம் செயல்படுத்தவேண்டும். இந்த ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்கள் மக்களுக்கான திட்டங்களாகவே இருக்கும்.
கடந்த 10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2,200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு செலுத்தக்கூடிய வட்டி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 6 மாதத்தில் 98,187 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழல் தொடர்பான முழு அறிக்கை ஒரு வார காலத்திற்குள் கிடைக்கப்பெறும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.