கணவனை மரத்தில் கட்டி வைத்து மனைவியை 4 பேர் கும்பல் பலாத்காரம்: உத்தரபிரதேசத்தில் அட்டூழியம்

லக்னோ: கணவனை மரத்தில் கட்டி வைத்து மனைவியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் 24 வயது கணவனும், 21 வயது மனைவியும் கடந்த 22ம் தேதி இரவு தங்களது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நடந்து சென்ற  அவர்களை, திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய கும்பல் ஒன்று வழிமறித்தது. திடீரென அந்த கும்பல் அந்த பெண்ணின் கணவரை தாக்கியது. பின்னர் அவரை மரத்தில் கட்டி வைத்த கும்பல், அவரது கண் முன்னே மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முசாபர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்துள்ளனர். கைதானவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, கணவரின் தாயாருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அவர்களைப் பார்க்க இருவரும் சென்றதாகவும், அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்திருந்த நிலையில், குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அதனை பார்க்க வீடு திரும்பியதாகவும் கணவர் கூறியுள்ளார்.இச்சம்பவம் குறித்து முசாபர் நகர் எஸ்பி அபிஷேக் யாதவ் கூறுகையில், ‘குற்றவாளிகள் அனைவரது மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம். 4 பேர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் அதனை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அவர்களில் 2 பேர் சிறுவர்கள்’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.