புதுடில்லி: பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா, பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடப்பாண்டிற்கான பத்ம விருதுகள் 2வது கட்டமாக இன்று (மார்ச் 28) வழங்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மீதமுள்ள 64 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார். பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, டாக்டர் வீராசாமி சேஷய்யா, சமூக செயற்பாட்டாளர் தாமோதரன், தவில் இசைக்கலைஞர் முருகையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கினார்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத், சுமித் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மறைந்த உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பிரபா அத்ரே உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதும், பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா, இணை இயக்குநர் சுசித்ரா எல்லாவிற்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது.
புதுடில்லி: பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா, பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.