பொதுநுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துங்கள்! மாநில பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

டெல்லி: மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துங்கள் என யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.

மத்தியஅரசு நடப்பு கல்வியாண்டு முதல், மத்திய பல்கலைக்கழகங்களின் இளநிலை மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், பிளஸ்2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் யுஜிசி அறிவித்தது.

இந்த நிலையில், மாநில பல்கலைக்கழகங்களிலும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முன்வர வேண்டும் என பல்கலைக் கழக மானிய குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக யுஜிசி செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பல்கலைக்கழகங்களை போல மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முன்வர வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. மேலும், சில நேரங்களில் வெவ்வேறு நுழைவுத் தேர்வுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படுவதும் இதனால் மாணவர்கள் அதை சந்திப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.  இதனால் இளநிலை கல்லூர படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த மாநில பல்கலைக்கழகங்களும் முன்வர வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

நுழைவுத் தேர்வால் உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை பெருமளவில் குறைந்து விடும் என தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்து வரும் நிலையில், பல்கலைக்கழக மானிய குழுவின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் இளநிலை கல்லூரி படிப்புக்கு ஒருபோதும் நுழைவுதேர்வு நடத்தப்படாது என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.